உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முத்துப்பேட்டையில் பசுமையாக வளர்ந்து வரும் குறுங்காடுகள் பறவைகள் தஞ்சமடைகின்றன

 முத்துப்பேட்டையில் பசுமையாக வளர்ந்து வரும் குறுங்காடுகள் பறவைகள் தஞ்சமடைகின்றன

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை ஊராட்சியில் 2019ல் நடப்பட்ட குறுங்காடுகளுக்கான மரக்கன்றுகள் தற்போது பசுமையாக அடர் வனமாக மாறி வருகிறது. முத்துப்பேட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 சென்ட் நிலத்தில் புங்கன், நாட்டு பாதாம், கொய்யா, வேம்பு, பெரிய நெல்லி, சிறிய நெல்லி, நாட்டு பூவரசு, வாகை, சவுக்கு, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை நெருக்கமாக ஒரு அடி இடைவெளியில் நட்டனர். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பராமரித்து வந்த நிலையில் நன்றாக வேரூன்றி கிளைகளை பரப்பி வளர்ந்துள்ளது. மரக்கன்றுகள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பராமரிப்பின்றி தானாக வளர்ந்துள்ளது. முத்துப்பேட்டை மற்றும் பெரியபட்டினம் கிராமப் பகுதிகளில் கடற்கரையை ஒட்டி இருந்தாலும் அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம் குடிப்பதற்கு ஏற்றவாறு சுவையாக உள்ளது.நல்ல தண்ணீரில் வளர்க்கப்பட்ட குறுங்காடுகள் செழித்து வளர்ந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: அடர்ந்த சோலைவனம் போல் காணப்படும் குறுங்காடுகளில் இரவு நேரங்களில் ஏராளமான பறவைகள் வந்து தஞ்சம் அடைகின்றன. பாம்பு, பல்லி உள்ளிட்ட இயற்கை சார்ந்த உயிரினங்கள் அதிகளவு குறுங்காடுகளில் தங்களது வாழ்விடங்களாக அமைத்துக் கொண்டுள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை