உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக.30, 31ல் டைப்ரைட்டிங் தேர்வு கீழக்கரை, பரமக்குடியில் நடக்கிறது

ஆக.30, 31ல் டைப்ரைட்டிங் தேர்வு கீழக்கரை, பரமக்குடியில் நடக்கிறது

கீழக்கரை: அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.,30 மற்றும் 31 (சனி, ஞாயிறு) ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது. கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 3000த்திற்கும் அதிக மானோர் கலந்து கொள்ள உள்ளனர். டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், மறுநாள் இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்கிறது. தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றுள்ளனர். தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே தகுதி பெறுகின்றனர் என ராமநாதபுரம் மாவட்ட வணிக வியல் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை