| ADDED : ஜன 11, 2024 04:19 AM
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் அழகப்பா பல்கலை அளவில் மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் பிரசாத் வரவேற்றார்.போட்டிகளில் பரமக்குடி அரசு கல்லுாரி, காரைக்குடி அழகப்பா, மதுரை கே.எல்.என்., பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லுாரி, கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, மண்டபம் ராஜா கல்லுாரி, செய்து அம்மாள், செய்யது ஹமீதியா கல்லுாரிகள் என 10 கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றனர். குழு போட்டிகளாக நடந்த நிலையில் ஒவ்வொரு மாணவரும் 5 சுற்றுகளில் விளையாடினர். இதில் 3 முறை வெற்றி பெறுவோர் உட்பட மொத்தம் 4 ரேங்க் அடிப்படையில் தலா 6 பேருக்கு வழங்கப்படும்.தேர்வாகும் மாணவர்கள் திருச்சியில் நடக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலை அளவிலான தென்னிந்திய செஸ் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளை அழகப்பா பல்கலை கன்வீனர் அசோக்குமார் நடத்தினார்.