உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மொபைல் போன் தர மறுத்த தொழிலாளி வெட்டி கொலை

மொபைல் போன் தர மறுத்த தொழிலாளி வெட்டி கொலை

ராணிப்பேட்டை:சோளிங்கர் அருகே, மொபைல்போன் தர மறுத்த கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தேவராஜ், 37. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க, அப்பகுதியிலுள்ள ஏரிக்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு மது போதையில் இருந்த சிலர், தேவராஜ் வைத்திருந்த மொபைல்போனை தரக்கேட்டனர். அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்து அக்கும்பல், தேவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் உயிரிழந்தார். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை