உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மினி லாரி மோதி அங்கன்வாடி சுவர் இடிந்து பெண் உதவியாளர் பலி

மினி லாரி மோதி அங்கன்வாடி சுவர் இடிந்து பெண் உதவியாளர் பலி

வாலாஜா : வாலாஜா அருகே, மினி லாரி மோதி அங்கன்வாடி சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஈச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 35, இவர், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வழக்கம்போல், இவர் அங்கன்வாடி மைய வளாகத்தில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 28, என்பவர் ஓட்டி சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, அங்கன்வாடி மையத்தின் சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து லட்சுமி மீது விழுந்தது. படுகாயமடைந்த அவரை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை