மேலும் செய்திகள்
தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு
21-Apr-2025
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, உறவினர் வீட்டில் நகை திருடிய பெண்ணை கைது செய்து, 28 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அசோக் நகரை சேர்ந்தவர் தெய்வானை, 54; கடந்த, 6ம் தேதி வீட்டில் கோலமாவு டப்பாவில் சாவியை வைத்து விட்டு, மருத்துவமனைக்கு சென்றார். வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த, 28 பவுன் நகை திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். அவர் புகாரின்படி அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.பெரம்பூரிலிருந்து உறவினரான சரஸ்வதி, 58, அடிக்கடி தெய்வானை வீட்டுக்கு வருவாராம். அப்போது அவர் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ளார். கடந்த, 6ம் தேதி அவர் வெளியே சென்றிருந்ததை அறிந்து வந்த சரஸ்வதி, கோலமாவு டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து, 28 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் சரஸ்வதியை நேற்று கைது செய்து, 28 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
21-Apr-2025