விருப்ப படிப்பை தேர்வு செய்து உயர்கல்வியில் சேர அறிவுரை
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளி-களில், பிளஸ் 2 படித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு, 'உயர்வுக்கு படி' விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்டம் வாரியாக நடக்கிறது. அதன்படி சேலம் கோட்டம் சார்பில் மரவனேரியில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:மாவட்டத்தில், 19 ஐ.டி.ஐ., 15 சுயநிதி கல்லுாரி, 5 அரசு கல்-லுாரி, 2 அரசு உதவி பெறும் கல்லுாரி உள்ளிட்டவற்றில் பல்-வேறு இடங்கள் காலியாக உள்ளன. அதனால் மாணவ, மாண-வியர், விருப்ப படிப்பை தேர்வு செய்து உயர்கல்வியில் சேர வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர் உயர்கல்-வியில் சேரும்போது மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை, வங்-கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.இதில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி குறித்த விளக்கம், இ - சேவை அரங்கு, பல்வேறு துறை சார்பில் உயர்கல்வி ஆலோ-சனை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா உள்ளிட்ட அதிகாரிகள், அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 841 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாணவிக்கு வாழ்த்துமன வளர்ச்சி குன்றியோருக்கு தேசிய போச்சி விளையாட்டு போட்டியில் தமிழகம் சார்பில் சேலம், சி.எஸ்.ஐ., பாலர் ஞான இல்ல மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படிக்கும் ஸ்ரீவள்ளி பங்கேற்றார். அவர் இரட்டையர் பிரிவில் தங்கம், கலப்பு இரட்-டையரில் வெள்ளி வென்றார். இதன்மூலம் நவம்பரில் இந்தி-யாவில் நடக்க உள்ள தெற்காசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட தேர்வாகியுள்ளார். அவர், சேலம், மரவேனரியில் நடந்த உயர்வுக்கு படி நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.