உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்

கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்

சேலம், : சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்-பூசி போடும் முகாம், கடந்த ஜூன், 10 முதல், 30 வரை நடந்-தது. இதில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் சரிவர தடுப்பூசி போடவில்லை என, கால்நடை வளர்ப்பு விவசாயிகள் புகார் தெரி-வித்துள்ளனர். மேலும் முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் செய்யவில்லை, தடுப்-பூசி போடும் இடம், நாள், நேரம் போன்ற விபரங்களும் முறை-யாக தெரியப்படுத்தவில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்-குனர் பாபு கூறுகையில், ''கால்நடைக்கு கோமாரி தடுப்பூசி போடாத விவசாயிகள், தகவல் தெரிவித்தால், அப்பகுதியில் முகாம் நடத்தி விடுபட்ட கால்நடைக்கும் தடுப்பூசி போட ஏற்-பாடு செய்யப்படும். இதுகுறித்து, 98427 - 46676 என்ற எண்ணில் தகவல் தரலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ