மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலிஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி அருகே அல்லிமுத்துகொட்டாயை சேர்ந்த, விவசாயி தங்கமணி, 25. இவர் வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் குடல் தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன. 13 ஆடுகள் படுகாயங்களுடன் இருந்தன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் விசாரித்து, நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிவித்தனர்.இட ஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபத்தால் என்ன பயன்?