உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.காளிப்பட்டி, சாமியப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45, தனியார் இரும்பாலை ஊழியர். இவரது மனைவி சாந்தி, 38; இருவரும் நேற்று முன்-தினம் இரவு வீட்டு மாடியில் துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, சாந்தி அணிந்திருந்த ஏழு பவுன் நகையை கொள்ளைய-டித்து சென்றான். இதேபோல் மேச்சேரியை அடுத்த குக்கல்பட்-டியில், ஜவுளி கடை உரிமையாளர் சீனிவாசன் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !