உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலைவாசல்: தலைவாசல் அருகே சாத்தப்பாடியில் பச்சையம்மன், சிதம்பரேஸ்-வரர் கோவில்கள் உள்ளன. அங்கு ஆவணி திருவிழா கடந்த ஆக., 30ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு பச்சையம்மன் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. மதியம் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்-தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் நரசிங்கபுரம், பள்ளிக்கூட தெருவில் உள்ள சமயபுரம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சுவாமிக்கு விமான அலகு, கத்தி அலகு, கம்பி அலகு குத்தியும், அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்தும், பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்-திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை