உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்

சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபர்

சேலம்: சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர், பரிசோதனை செய்ய வந்தார். ஆனால் திடீ-ரென, பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடி-விட்டார். சந்தேகம் அடைந்த பரிசோதகர், பஸ்சில் சோதித்த-போது, ஒரு பையில் சந்தன கட்டைகள் இருந்ததும், அதை அந்த வாலிபர் கொண்டு வந்ததும் தெரிந்தது. பின், 13 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்ப-டைத்தனர். அந்த வாலிபர், வாழப்பாடியில் ஏறியது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ