உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் இருந்து விழுந்த சென்னை வாலிபர் சாவு

ரயிலில் இருந்து விழுந்த சென்னை வாலிபர் சாவு

சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் காகங்கரை - சாமல்பட்டி ஸ்டேஷன்கள் இடையே, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இறந்து கிடந்தவர், சென்னை, சாலிகிராமம், விஜயராவகபுரம், 5வது தெருவை சேர்ந்த விக்னேஷ், 26. பெயின்டரான அவர், கடந்த 1, இரவு கோவை செல்வதற்கு, தன்பாத் - ஆலப்புழா ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணித்தார். ஆனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அவர், தலையில் அடிபட்டு இறந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ