உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சில் மருத்துவரை சீண்டிய கூலித்தொழிலாளி கைது

பஸ்சில் மருத்துவரை சீண்டிய கூலித்தொழிலாளி கைது

சேலம், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த, 27 வயது பெண், தனியார் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். நேற்று அவர், கொண்டலாம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தார். நெத்திமேடு அருகே வந்தபோது, அவரிடம், பஸ்சில் வந்த ஒருவர், சில்மிஷம் செய்துள்ளார். மருத்துவர் கூச்சலிடவே, சக பயணியர், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வீரபாண்டி அருகே பாலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதாசிவம், 42, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை