உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோட்டை மாரியம்மன் கோவிலில் 23ல் ஆடித்திருவிழா தொடக்கம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் 23ல் ஆடித்திருவிழா தொடக்கம்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, வரும், 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. ஜூலை, 30ல் கம்பம் நடுதல், ஆக., 5ல் சக்தி அழைப்பு, 6ல் சக்தி கரகம், 7, 8, 9ல் பொங்கல், உருளுதண்டம், 11ல் சத்தாபரணம், 12ல் வசந்த உற்சவம் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஆக., 13ல் பால்குட விழா மகா அபி ேஷகத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெறும். பூச்சாட்டுதலில் தொடங்கி விழா நிறைவு வரை, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். இத்தகவலை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை