உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி

அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி

சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர், தாம்பரத்-துக்கு மாற்றப்பட்டார். இதனால் சேலம் மாநகராட்சி புது கமிஷ-னராக ரஞ்ஜீத் சிங் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரபிர-தேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், 2016ல் ஐ.ஏ.எஸ்., தேர்வாகி, குன்னுாரில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். நாகப்பட்டினம் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த நிலையில், சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.இவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்க்க நட-வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அடிப்படை வசதிகளான, 24 மணி நேர குடிநீர் வினியோகம், குப்பை அகற்றுதல், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்-படும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்-டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணி இன்னும் முடியாமல் உள்ளது. அதுவரை எங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க தற்கா-லிக நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்-தவும், வரி வசூல் தொய்வின்றி நடக்கவும், நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ