உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி

வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் அருகே, கே.எம்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர் ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார்.தேர்தல் பணிக்கு வீரகனுாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, 'டிஸ்கவர்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். இறந்த செல்வராஜூக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ