உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம்நாளை கும்பாபிேஷகம்மகுடஞ்சாவடி, ஆக. 22-சித்தர்கோவில் அருகே ஆரியகவுண்டம்பட்டி, சித்ரானுாரில் உள்ள முத்துமுனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 15ல் முகூர்த்தகால் நடுதல், கங்கானம் கட்டுதல் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு சித்தர்கோவிலுக்கு வந்த பக்தர்கள் புனித கிணறுகளில் நீராடினர். தொடர்ந்து குடங்களில் புனித தீர்த்தம் நிரப்பி பூமாலை சூடினர். சித்தர்கோவில் சிவாச்சாரியார், தீர்த்த குடங்களுக்கு பூஜை செய்தார். 9:30 மணிக்கு பசு, காளைகள், குதிரை முன்புறம் செல்ல, பக்தர்கள் ஊர்வலமாக நடந்து சென்று கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் முத்து முனியப்பனுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை