மேலும் செய்திகள்
மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது
21-Feb-2025
கெங்கவல்லி : கணவன் வெட்டியதில், சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, 74. கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார், 45. ஆட்டோ டிரைவரான இவர், கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், கடந்த, 19ல், மனைவி தவமணி, 38, மற்றும் மூன்று குழந்தைகளை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டினார். இதில், மகள் விஜயதாரணி, 13, ஆறு வயது மகன் அருள்பிரகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று மாலை, சிகிச்சையில் இருந்த தவமணி உயிரிழந்தார். மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Feb-2025