உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜோதிடர் மீது தாக்குதல் 4 பேர் அதிரடி கைது

ஜோதிடர் மீது தாக்குதல் 4 பேர் அதிரடி கைது

சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் குமார், 40, ஜோதிடர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்-ததால், ஜோதிடரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் எருமாபாளையம் பகுதியில் ஜோதிடர் நடந்து சென்ற போது, அங்கு வந்த பெண்ணின் உற-வினர் உள்ளிட்ட ஐந்து பேர் கும்பல், ஜோதிடரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். பின், கிரிக்கெட் மட்டையால் ஜோதிடரை தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 24. இசக்கிமுத்து, 55, பரமசிவம், 46, ஹரிகர-சுதன், 27, ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய மோகன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை