மதுபாட்டில் பதுக்கி விற்ற 5 பேர் சிக்கினர்
ஆத்துார்: ஆத்துார் டவுன், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை ஸ்டேஷன் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற, தம்மம்பட்டி முத்து-ராஜா, 42, மல்லியக்கரை தேவராஜ், 32, ஆத்துார் கர்ணன், 24, முல்-லைவாடி குமார், 48, கூடமலை பிரபாகரன், 38, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 100க்கும் மேற்-பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.