உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது

அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது

சேலம்: சேலம், கருங்கல்பட்டி வடக்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர், 40. அ.தி.மு.க.,வில், சேலம் மாநகர ஐ.டி., விங் பிரிவில் இணை செயலராக உள்ளார். நேற்று முன்தினம் அவரது வீடு அருகே நின்றிருந்தார். அப்போது, 3 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கவுரிசங்கர் தட்டிக்கேட்க, கத்தியை காட்டி மிரட்டி, 2.5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கவுரிசங்கர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். நேற்று, கிச்சிப்பா-ளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த, ரவுடி பில் கிளிட்டன், 27, என்பவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ