புது பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
புது பஸ் ஸ்டாண்ட் பராமரிப்புரூ.20 லட்சம் ஒதுக்கீடுசேலம், நவ. 7-சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள புது பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு பஸ்கள் வந்து நிற்கும் இடம், துாண்கள், கட்டண கழிப்பிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல், மின் விளக்கு, கேபிள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு மாநகராட்சி பொது நிதியில் ஒப்பந்தம் நடத்தி, ஒப்பந்ததாரருக்கு, 20.63 லட்சம் ரூபாயில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.