மேலும் செய்திகள்
மொபட்-பைக் மோதிய விபத்தில் இருவர் பலி
08-Jul-2025
ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், கொப்புக்கொண்ட பெருமாள் கோவில் அடிவார பகுதியை சேர்ந்தவர் தேவி, 21. ஆத்துார் நகர் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில் வரவேற்பாளராக உள்ளார்.கடந்த, 26ல், ஆந்திரா, காண்டலபெண்டாவை சேர்ந்த செந்தில்குமார், 52, என்பவர், மருத்துவரை பார்க்க வந்தார். அன்று மதியம், உணவு அருந்த தேவி சென்றபோது, அவரது மொபைல் போனை, செந்தில்குமார் எடுத்துச்சென்றார். இதுகுறித்து தேவி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று, மீண்டும் ஆத்துார் வந்தபோது செந்தில்குமாரை, போலீசார் கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.
08-Jul-2025