அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப்-பாதை, 6 கிலோ மீட்டர் துாரம் கொண்டது.ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, நாமக்கல் ரோடு, மலையடி-வாரம், ஆறுமுக சுவாமி திருக்கோவில் துவங்கி, பெரிய ஓங்காளி-யம்மன் கோவில், பச்சியம்மன் கோவில், நாதஸ்வர கணபதி கோவில், மலைச்சுற்று பாதை, வாலரைகேட், மலைக்காவலர் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரத வீதி வழி-யாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை சுற்றி வந்து, பக்தர்கள் கிரிவலத்தை நிறைவு செய்தனர். இதனால், புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கைலாச-நாதர் கோவில், மேற்கு ரத வீதி, பரமத்தி வேலுார் சாலையில் பக்-தர்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், ராசி-புரம், சங்ககிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000 கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.