உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

மகுடஞ்சாவடி: குடஞ்சாவடியில், காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமா-ணிக்கம், அருந்ததியர் காலனியில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்சாலை அமைக்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டு-களாக ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதிகாலையில் காளிப்பட்டிக்கு விளைபொருட்களை விற்க, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் விவசா-யிகள், அடிக்கடி தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்-றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாவதால், மீண்டும் சாலை அமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ