ஒரே குடும்பத்தில் ஐவர் தீக்குளிக்க முயற்சி
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த கோல்காரனுார், பச்சனம்பட்-டியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவர், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து, திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார், ஐவரையும் தடுத்து மீட்டு முத-லுதவி அளித்தனர்.அதன்பின் சுரேஷ் கூறியதாவது:என் தந்தை வடிவேலுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன், 900 சதுரடியில் தொகுப்பு வீடு, வருவாய்த்-துறையால் வழங்கப்பட்டது. தற்போது என் பெரியப்பா மகன்கள், அந்த வீட்டை அபகரிக்க திட்டமிட்டு, எங்களை விரட்டுகின்-றனர். அதை விட்டால், எங்களுக்கு வேறு வீடு, சொத்து எதுவும் இல்லை. எனவே, வீட்டை அபகரிக்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம். இவ்வாறு கூறினார்.அதன்பின், கலெக்டர் அலுவல-கத்தில் சுரேஷ் மனு அளித்தார்.