உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓமலுார் :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓமலுார் ஒன்றிய தலைவி கவுரி தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் உள்ள, 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புதல்; ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, 6,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஒன்றிய செயலர் கண்ணகி, மாவட்ட, முன்னாள் பொருளாளர் அய்யாதுரை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை