உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு

தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ர-மணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, 2008ல் கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து கும்பாபி ேஷகம் நடத்த, 10 மாதங்களாக திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் நைனா-குமார், செயல் அலுவலர் சரண்யா தலைமையில், திருப்பணி உப-யதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று கோவிலில் நடந்தது. அதில் புரட்டாசியில் தேர் திருவிழா நடக்க, ஒரு மாதமே உள்ளதால் வண்ணம் தீட்டும் பணி மேற்கொண்டால் பக்தர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். அதனால் தேர் திருவிழா முடிந்த பின் பாலா-லயம், வண்ணம் தீட்டும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை