உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

கருமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

ஏற்காடு: ஏற்காடு, முருகன் நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் கும்பா-பிஷேகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஏராள-மானோர், வீடுகளில் முளைப்பாரி விதை பதியம் செய்திருந்தனர். நேற்று இரவு, 7:00 மணிக்கு, அலங்கார ஏரியில் இருந்து கருமாரி அம்மனுக்கு சக்தி அழைத்தல், அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்தர்கள் பலர், வீடுகளில் வைத்திருந்த முளைப்பாரி பயிர், பால் குடங்களை எடுத்துக்கொண்டு, ஏற்காடு டவுன், பஸ் ஸ்டாண்ட், அழகாபுரம், ஜெரீனாக்காடு வழியே ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை