எமகண்ட நேரத்தில்ஆயுள் விருத்தி ேஹாமம்
தலைவாசல், தலைவாசல், சம்பேரி, ஜம்பு மகரிஷி ஆசிரமத்தில் பிரம்ம சுவடியுடன் சித்ரகுப்தன், எருமை வாகனத்தில் எமதர்மராஜா சிலை உள்ளது. அங்கு சனிதோறும் எம கண்ட நேரத்தில் ஆயுள் விருத்தி ேஹாமம் நடத்த, ஆசிரம நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று மதியம், 1:30 முதல், 3:00 மணி வரை, எமதர்மராஜா சிலை முன், ஆயுள் விருத்தி மஹா ேஹாமம் நடந்தது. அப்போது ஆயுள் விருத்தி, மரண பயம், கடன் பிரச்னை போன்றவற்றுக்கு, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் ஆத்துார், கோட்டை செல்லியம்மன் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி வராகி உள்ளிட்ட சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபி ேஷக பூஜை நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.