உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெற்றோரை இழந்த மாணவியருக்கு உதவிதொகை கிடைக்க நடவடிக்கை

பெற்றோரை இழந்த மாணவியருக்கு உதவிதொகை கிடைக்க நடவடிக்கை

மேட்டூர் : அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேட்டூர் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி பிரியா தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், குழந்-தைகள் நலக்குழு உறுப்பினர் பத்மினி, மேட்டூர் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வளர்மதி, வக்கீல் சதாசிவம் முன்-னிலை வகித்தனர்.கூட்டத்தில் சார்பு நீதிபதி பிரியா பேசுகையில், ''மாவட்ட குழந்-தைகள் நல அலுவலகம் சார்பில் தந்தை, தாயை இழந்த அல்லது இருவரையுமே இழந்த மாணவியருக்கு அரசு சார்பில் கல்வி உதவி தொகையாக மாதம், 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு தாய் அல்லது தந்தை இல்லாத மாணவியரில் ஒருவர் மட்டும் கல்வி உதவி தொகை பெறுகிறார். 19 மாணவியருக்கு உதவி தொகை இன்னமும் கிடைக்கவில்லை. அவர்களில் தகுதி வாய்ந்த மாணவியருக்கு உதவி தொகை கிடைக்க வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியர் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நம்மாலும் உயர் பதவிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் கற்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி