மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு, வினாடிக்கு, 35,250 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, 42,250 கன அடியாக அதிகரித்தது. இதற்கேற்ப நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு, 35,000 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் திறப்பு, நேற்று மாலை, 42,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில், 22,100 கனஅடி நீர் மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கும், 19,900 கனஅடி உபரி நீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.