வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே, சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 61. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். மனைவி, மகன் வெளியூர் சென்றுள்-ளனர். நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். மாலையில், வீடு திறந்து கிடப்பதாக, உறவினர்கள் மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர்.வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதில் வைத்-திருந்த பணம், தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. எவ்வளவு நகை, பணம் திருட்டு போனது என தெரியவில்லை. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.