உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி

கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி

சேலம்:சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்பந்த வன ஊழியர்களான, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்செல்வன், 29, சேலம், செட்டிச்சாவடியை சேர்ந்த முருகேசன், 46, நேற்று ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு, கோதுமை தவிடை மான்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எடுத்து சென்ற போது, கடமான் ஒன்று, தமிழ்செல்வனை முட்டித்தள்ளியது. உடனிருந்த முருகேசன், அவரை காப்பாற்ற முயன்றார். வன ஊழியர்கள், இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியில் தமிழ்செல்வன் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை