கார் மோதி காவலாளி பலி
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுக்கோட்டை, சடையம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தன், 60. இவர் குமரகிரி அருகே உள்ள இரும்பு கடையில், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியதில் துாக்கி வீசப்-பட்ட கோவிந்தன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மா-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.