உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்

நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் பாஷா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி: என் வார்டில் சிறு பாலம் போட, 2 ஆண்டாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை.பாஷா: அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா: என் வார்டில் குப்பை அள்ளப்படவில்லை. அதேபோல் நகராட்சி முழுதும் அள்ளாததால் ஊரே நாறிப்போய் உள்ளது.சுகாதார அலுவலர் முருகன்: குப்பை அகற்றப்பட்டு தான் வருகிறது.அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன்: மின் மயானத்தில் சடலம் எரியூட்ட பகலில், 5,500 ரூபாய், இரவில், 7,500 ரூபாய் வசூலிக்கின்றனர். நகராட்சியால் நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு, ஏன் போர்டு வைக்கவில்லை? பாஷா: சடலம் எரியூட்ட, 3,000 ரூபாய் தான் வசூலிக்க வேண்டும். ஒரு வாரத்தில் போர்டு வைக்கப்படும்.அ.தி.மு.க., முருகன்: தினமும், 5 முதல், 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. 11 டன்னுக்கு ரசீது போடப்படுகிறது. நகராட்சி பணம் கொள்ளை போகிறது.கமிஷனர் கோபிநாத்: வேண்டாதவர்கள் தவறான தகவல் தந்துள்ளார்கள். முறையாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது. முன்னதாக, 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை