20ல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
வாழப்பாடி: பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் அறிக்கை:பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும், 20ல் லேப்-ராஸ்கோபி முறையில் பெண்களுக்கு நவீன கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. அரசு நடத்தும் இலவச முகாமில், 22 வயது நிறைவடைந்த பெண்கள் பங்கேற்று பயன்-பெறலாம். விரும்பும் பெண்கள், ஒரு நாள் முன்பாக, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும்.இதில் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, மாதவிலக்கான, 7 நாள்களுக்குள்(டியூ-பெக்டமி) குடும்ப நல அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்-படும். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மார்களின் வங்கி கணக்கில் அரசு ஊக்கத்தொகையாக, 600 ரூபாய் வழங்கப்-படும். இதற்கு, 9940709571 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.