பிளாஸ்டிக் இருந்ததால் குடோனுக்கு சீல்
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி சுகாதார அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள், ஆத்துார் புறவழிச்சாலை, சந்தனகிரி பிரிவு சாலையில் உள்ள குடோனில் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு, 2 டன்னுக்கு மேல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருட்கள், விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் சென்னையை சேர்ந்த புருேஷாத்தமன், குடோன் நடத்தியது தெரிந்தது. உடனே குடோனுக்கு, 'சீல்' வைத்து, 'நோட்டீஸ்' வழங்கினர்.* ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கடை எண்: 1, வாடகை செலுத்தப்-படாதது தெரிந்தது. இதனால் அந்த கடையை பூட்டி, 'சீல்' வைத்-தனர்.