உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரடைப்பால் இறந்த வீரர் அரசு மரியாதையுடன் அஞ்சலி

மாரடைப்பால் இறந்த வீரர் அரசு மரியாதையுடன் அஞ்சலி

மாரடைப்பால் இறந்த வீரர்அரசு மரியாதையுடன் அஞ்சலிநங்கவள்ளி, ஜன. 4-நங்கவள்ளி, சாணார்பட்டி, நரிக்கல்லுாரை சேர்ந்த முனுசாமி மகன் சிவகுமார், 44. திரிபுரா மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்தார். 2024 டிச., 26 விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். நேற்று இறுதி அஞ்சலி, அவரது சொந்த ஊரில் நடந்தது. சிவக்குமார் உடலுக்கு, மத்திய பாதுகாப்பு படையினர், துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செய்தனர். நங்கவள்ளி போலீசாரும் பங்கேற்றனர். தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை