உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்

பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்

சேலம்: சேலத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, மாவட்ட ஒருங்கிணைப்-பாளர்கள் அர்த்தனாரி, கோவிந்தன் தலை-மையில் நேற்று நடந்தது. இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறு-முகம் அளித்த பேட்டி: கடந்த சட்டசபை தேர்த-லுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அப்போது அவர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும்' என, வாக்கு-றுதி கொடுத்தார். அதை தேர்தல் வாக்குறுதியா-கவும் வெளியிட்டார்.அவர் ஆட்சிக்கு வந்தபின், நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில், சமீபத்தில் நடந்த பேச்சில், அமைச்சர் தங்கம் தென்னரசு, 'எங்களை நம்புங்கள் தரு-கிறோம்' என்றார். இப்படி ஒவ்வொரு முறையும் பேசி நம்ப வைத்து, எங்களை ஏமாற்றி வருகின்றனர். நிதி-நிலை சரியில்லை என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், ஆலோசனை வழங்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும், பழைய ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்.பழைய ஓய்வூதியம் உள்பட, 10 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, வரும் ஜன., 6 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை