உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறந்தவெளி பார்களாகும் பாலங்கள்

திறந்தவெளி பார்களாகும் பாலங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆற்றுப்பாலங்களை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்துவதால் அவ்வழியாகச் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, முறையூர் பகுதியில் உள்ள பாலாறு பாலங்களையும், விழுப்புணிக்களம் உப்பாறு பாலத்தையும் 'குடி'மகன்கள் சமீப காலமாக திறந்தவெளி 'பார்'களாக பயன்படுத்துகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல் பாலத்தின் இருபுறமும் அமர்ந்து கொண்டு அவ்வழியாகச் செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு தகராறு செய்கின்றனர். பெண்கள் டூவீலர்களில் அவ்வழியாகச் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பாலம் உள்ள பகுதி பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை