உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஜூலை 13ல் கொடியேற்றம்

மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஜூலை 13ல் கொடியேற்றம்

மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா வரும் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.18ம் தேதி திருக்கல்யாணமும்,21ம் தேதி தேரோட்டமும் 22ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.இந்தாண்டுக்கான விழா வருகிற 13ம் தேதி காலை 5:00 மணியிலிருந்து 6:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 18ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து இரவு 7:35 மணிக்குள் நடைபெற உள்ளது. 21ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து 6:30 மணிக்குள் தேரோட்டமும், 22ஆம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் (எ) முத்துச்சாமி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்