உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரியகுறிச்சி மகேந்திரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அரியகுறிச்சியில் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 15 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ