உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு

ஆலவிளாம்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிரமத்தில் காட்டு நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.350 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருப்புத்துார், காளையார்கோவில், கல்லல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளுடன் களத்தில் வீரர்கள் விளையாடினர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை