உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அருகே போலீசை தாக்கி தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு

சிவகங்கை அருகே போலீசை தாக்கி தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு

சிவகங்கை : சிவகங்கைமாவட்டம் காளையார்கோவிலில் வாகன சோதனையின் போது தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசாரை சுட்டு பிடித்தனர்.சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணமுருகன் மகன் அகிலன் 24. இவர் மீது திருப்புவனம், பழையனுார், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, மதுரை ஒத்தக்கடை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று காலை 7:30 மணிக்கு நண்பர்கள் 3 பேருடன் காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதியில் காரில் சென்றார். அந்த பகுதியில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்.ஐ., குகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சுட்டுப்பிடித்தனர்

அகிலன் வந்த காரை சோதனை செய்தனர். காரில் 22 கிலோ கஞ்சா , வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அகிலன் உள்ளிட்ட நண்பர்கள் அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் எஸ்.ஐ., குகனை தாக்கிவிட்டு தப்பினர். இதில் எஸ்.ஐ.,க்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து தப்பிச்சென்ற அகிலனை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தனது துப்பாக்கியால் வலது காலில் சுட்டுப் பிடித்தார். மற்ற 3 பேரும் தப்பினர். எஸ்.ஐ., குகன் மற்றும் காயமடைந்த அகிலனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப்பின் அகிலன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான 3 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஆக 18, 2024 10:09

அவன் அப்பாவி. அவனுக்கும்.கஞ்சா கடத்தலுக்கும் சம்பந்தமில்லைன்னு ஒரு ஒப்பாரி கும்பல் வரணுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை