உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேடன் நகரில் வழங்கிய பட்டா இடத்தில் கல் ஊன்றும் பணி

வேடன் நகரில் வழங்கிய பட்டா இடத்தில் கல் ஊன்றும் பணி

காரைக்குடி, : காரைக்குடி வேடன்நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கியும், அதற்கான இடம் வழங்காதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நேற்று வருவாய்த் துறையினர் இடம் ஒதுக்கீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட இடத்தில் கல் ஊன்றும் பணியை தொடங்கினர்.காரைக்குடியில் உள்ள வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், 106 குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்டதோடு சரி, தங்களுடைய இடம் எங்கே உள்ளது என்பது கூட தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடங்களை ஒப்படைக்கும் வகையில் திருவேலங்குடி பைபாஸ் அருகே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கல் ஊன்றி இடங்களை உறுதி செய்தனர். விரைவில் இடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி