உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச்சேர்ந்த இக்கோயிலில் பைரவர் அமர்ந்த யோக நிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணிக்கு ரமேஷ் குருக்களால் சிறப்பு பூஜை நடந்து யோகபைரவருக்கு பலவித திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பைரவருக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.* தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோவிலில் வைகாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கும்,வைரவருக்கும் கருப்புக் குருக்கள் தலைமையில்அஷ்ட பைரவ ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. சுமங்கலி பெண்கள் ஏழு பேர் ஏழு பொங்கல் வைத்து வழிபட்டனர்.இன்று தேவகோட்டையில் சொர்ண பைரவருக்கு காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ