உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு

ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ரயில் பாதையை செப்பனிடும் பேக்கிங் ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் நேற்று காலை மதுரை - மண்டபம் இடையே ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுரை - மண்டபம் இடையே அகல ரயில் பாதையில் உள்ள ஜல்லிகற்களை வெளியே எடுத்து மணல் குவியலை அகற்றும் பேக்கிங் மிஷின் ஒரு வாரமாக திருப்பாச்சேத்தி -- திருப்புவனம் இடையே பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிகாலை 5:15 மணிக்கு பேக்கிங் மிஷின் இன்ஜின் திருப்பாச்சேத்தி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருப்புவனம் புறப்பட்டது. திருப்பாச்சேத்தியில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் சென்ற போது இன்ஜினின் சக்கரங்கள் தடம்புரண்டு நின்றது.இதனால் மதுரையில் இருந்து காலை 6:20 மணிக்கு புறப்பட வேண்டிய மண்டபம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. மண்டபத்தில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்ட ரயில் மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டது.ரயில் பாதையில் சிக்கிய இன்ஜினை அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து ஜாக்கி, லீவர் மூலம் போராடி மீண்டும் ரயில் பாதைக்கு இன்ஜினை மதியம் 12:00 மணிக்கு கொண்டு வந்தனர். பின் பேக்கிங் மிஷின் இன்ஜின் திருப்புவனம் ஸ்டேஷனுக்கு சென்றது.மதியமே மீட்பு பணிகள் நிறைவடைந்ததால் மதியம் 1:20 மணிக்கு மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக மண்டபத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ