இளைஞரை வெட்டிய 4 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடி கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 20. இவர் நேற்று முன்தினம் உதயம் நகர் பகுதியில் சென்ற போது, 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய காரைக்குடி ரஸ்தா பகுதியைச் சேர்ந்த மகாராஜா 21 மற்றும் 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் ஒருவர் வளர்த்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான பன்றிகளை வெட்டி, கறியாக சுரேஷ்குமார் விற்பனை செய்ததாகவும், பலமுறை கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து, வெட்டியது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.